உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை நாள்முழுவதும் தரும் சுவையான சத்து நிறைந்த புரோட்டீன் அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம்,
முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து – தலா 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு,
உப்பு எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து எடுத்துக்கொள்ளவும்.
2. அதனுடன் முளைகட்டிய பயறு வகைகள், காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
3. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கத்தால் சுவையான புரோட்டீன் அடை தயார்!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு