• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விக்ராந்த் படத்துக்கு வசனம் எழுதிய விஜய் சேதுபதி !

October 26, 2018 தண்டோரா குழு

சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ராந்த் ராம்பிரகாஷ் ராயப்பாவின் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’,செல்வசேகரனின் ‘வெண்ணிலா கபடிகுழு 2′ மற்றும் ஜெகதீசனின் ‘பக்ரீத்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விக்ராந்த் கமிட்டாகியுள்ளார்.2015-ம் ஆண்டு விக்ராந்த் ஹீரோவாக நடித்து வெளியான படம் ‘தாக்க தாக்க’.இப்படத்தை விக்ராந்தின் சகோதரரான சஞ்ஜீவ் இயக்கியிருந்தார்.இவர்,மறுபடியும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்திற்கு வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.

“விஜய் சேதுபதியைச் சந்தித்த போது,கதையின் சுருக்கத்தைச் சொன்னேன்.அதைக் கேட்டதும்,‘நன்றாக இருக்கிறது. இந்தக் கதை விக்ராந்துக்குப் பொருத்தமாக இருக்கும்’என்றவர்,‘இந்தப் படத்துக்கு நான் வசனம் எழுதவா?’என்று கேட்டார்.அவருடைய பிஸி ஷெட்யூலில் இதெல்லாம் சாத்தியப்படுமா? என்று யோசித்தபோது,‘கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம்’என்று விஜய் சேதுபதி சொன்னார்.

அதேபோல்,அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் முடிந்த பிறகு,இரவு நேரங்களில் என்னுடன் இருந்து திரைக்கதையை மெருகேற்றியதோடு,வசனங்களையும் எழுதினார்.இதை விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங்கை நவம்பர் மாதம் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.வெகுவிரைவில் இதுகுறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் சேதுபதி தயாரித்து,நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு அவர்தான் வசனம் எழுதினார்.தற்போது தான் நடிக்காத படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க