• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னோட கதையை திருடி ’திமிரு பிடிச்சவன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது- க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார்

November 17, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக கதை திருட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.இந்நிலையில்,கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் திமிரு பிடிச்சவன்.இப்படம் நேற்று வெளியானது. இதற்கிடையில்,இப்படத்தின் கதை கரு என்னுடையைது என பிரபல க்ரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் குமார் தனது முகநூல் பக்கத்தில்,

“இவர்கள் திருந்தவே மாட்டார்களா? சென்ற வருடம் நான் oneindiaவில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து
‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க