• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத் !

November 30, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் அருண்ராஜா இயக்கும் கானா படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவத்தின் மூலம் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ஷிரின் நடிக்கிறார்.மேலும்,ராதாரவி,விக்னேஷ்காந்த் நடிக்கின்றனர்.இதற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.நேற்று முதல் துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தற்போது இப்படத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க