• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொங்கனி முறைப்படி நடைபெற்ற ரன்வீர் சிங் -தீபிகா படுகோன் திருமணம்

November 14, 2018 தண்டோரா குழு

நடிகர் ரன்வீர் சிங் – நடிகை தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மந்தம் தெரிவித்த நிலையில், இன்று இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில்,வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் இவர்களது திருமணம் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.

நாளை ஆனந்த் கராஜ் முறை திருமணம் நடைபெற உள்ளது.இவர்களின் திருமணத்திற்காக அழகிய நகரமான லேக் கோமாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.தீபிகா,ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண விழாவுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் மிகுந்த மரியாதையோடு இருவரும் சேர்ந்து வரவேற்றுள்ளனர்.இதையடுத்து,இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க