• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லக்னோவில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பில் ரஜினி

September 10, 2018 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி,த்ரிஷா,சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடப்பதை அடுத்து,ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 போலீஸ்காரர்களை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.மேலும்,படப்பிடிப்பின் போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் வாரணாசி,சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க