• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்அவுட் அசத்திய கேரள விஜய் ரசிகர்கள் !

November 2, 2018 தண்டோரா குழு

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில்,வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு,பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.இதனால் சர்கார் படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அந்த வகையில் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றமான கொல்லம் நண்பன்ஸ், இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர்.இந்த கட்-அவுட்டின் உயரம் 175 அடி எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,மலையாள நடிகர் சன்னி வைன் இந்த கட் அவுட்டை இன்று மாலை திறந்து வைக்கிறார்.மேலும்,இந்த திறப்பு விழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க