• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது– நடிகை சமந்தா

October 9, 2018 தண்டோரா குழு

தமிழ்,தெலுங்கு என இருமொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.மதுரையில் நேற்று நடந்த தனியார் கைபேசி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் நடிகை சமந்தா கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு மதுரை மக்களின் பாசம் பிடிக்கும்.ரசிகர்கள் தான் என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றனர் என்று கூறினார்.அப்போது,அவரிடம் செய்தியாளர்கள்,நடிகைகள் ஸ்ரீரெட்டி,தனுஸ்ரீ மற்றும் கங்கனா என பலர் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பற்றி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது குறித்து கருத்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா,நான் 10 வருடமாக சினிமாவில் இருந்துவிட்டேன்.சினிமாவிலிருக்கும் நடிகர் ஒருவரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். கடவுளைப்போல் சினிமாவை மதிக்கிறேன்.என்னுடைய கேரியரில் எனக்கு எந்தவிதமான பாலியல் தொல்லைகளும் நடைபெற்றதில்லை.எல்லாத் துறைகளையும் போல திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது” என்றுக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க