• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ரஜினியின் இரண்டாவது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

February 8, 2019 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கிறது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதை பைகளை வழங்கி ரஜினி அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க