• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னத்தின் எல்லா படத்திலும் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் – அரவிந்த் சாமி

September 5, 2018 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் எனமிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய அரவிந்த் சாமி,

நான் மணி ரத்னத்தின் 6 படங்களில் நடித்திருக்கிறேன். இருவர் படத்தில் பாடி இருக்கிறேன். உயிரே படத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன். மொத்தம் 8 படங்களில் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படத்தில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் இயக்கிய மற்ற 12 படங்களில் என்னை ஏன் நடிக்க வைக்க வில்லை என மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க