• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொன்னியின் செல்வன் வெப் சீரியஸை கையிலெடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

January 30, 2019 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் மற்றும் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார். கிராபிக்ஸ் டிசைனரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், தற்போது பொன்னியின் செல்வன் வெப் சீரியஸை கையிலேடுதுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் 10, 11-ம் நூற்றாண்டுகளின் சோழ சாம்ராஜ்ய பேரரசான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையைப் பற்றிய சரித்திர எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி உருவாக இருக்கிறது. இந்த வரலாற்று வலைத்தொடரின் தயாரிப்பாளர் கிரியேட்டிவ் இயக்குநராக சவுந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்ற இருக்கிறார். இந்த வலைத்தொடர் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இருக்கும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து எம்.எக்ஸ். பிளேயரின் தலைமை நிர்வாக அதிகாரி கரண்பேடி கூறுகையில்,

இணைய உலகில் தடம் பதிக்கும் சவுந்தர்யாவுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவருடைய தனித்துவமிக்க, பிரமாண்டமான தொலைநோக்குப் பார்வையுள்ள அணுகுமுறை அசாத்தியமாகவுள்ளது. இணைய பார்வையாளர்களை இந்தப் படைப்பு ஈர்க்கப்போவது உறுதி எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த வெப் சீரிஸ் மூலக்கதையை உயிரோட்டத்துடன் இணைய மேடையில் கொண்டு வரும் எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனத்தின் கொள்கையையொட்டியே நிகழ்ந்துள்ளது. இதை இந்தி மட்டுமல்லாமல் மற்ற பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளிலும் கடைபிடிப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க