• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக் பாஸ் 2 வீட்டில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

September 8, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, சென்றாயன், தாடி பாலாஜி உட்பட 8 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனி அரங்கில் வீடு போன்று செட் அமைத்து நடந்து வருகிறது.இதற்காகஅங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இரவும் பகலுமாக அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டம், மத்தூரைச் சேர்ந்த குணசேகரன்(30) என்பவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2-வது மாடியில் குணசேகரன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குணசேகரன், தான் தங்கியுள்ள அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.உடனே அருகில் இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனையிலிருந்த குணசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில் குணசேகரன் சாப்பிட்டு விட்டு கைகழுவும் போது தவறி கீழே விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க