• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

September 6, 2018 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய படங்களில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் தனுஷ், நடிகர் மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். இதுமட்டுமின்றி ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி ‘பவர் பாண்டி’ படத்தை எடுத்து, அதிலும் வெற்றியை அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமனா தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

மேலும் படிக்க