• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

September 6, 2018 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய படங்களில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் தனுஷ், நடிகர் மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். இதுமட்டுமின்றி ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி ‘பவர் பாண்டி’ படத்தை எடுத்து, அதிலும் வெற்றியை அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமனா தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

மேலும் படிக்க