• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனுஷின் இரண்டு படங்களை தயாரிக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

January 1, 2019 தண்டோரா குழு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக மாரி 2 படம் வெளியானது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்ததாக வெற்றி மாறன், ராம்குமார், துரை செந்தில் குமார் ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை சத்ய ஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ தனுஷ் தான்.

முதலில் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது அவர்களுக்கு 34-வது படமாகும். அதைபோல் அந்நிறுவனத்தின் 35-வது படத்தில் முண்டாசுபட்டி, ராட்சன் படங்கள் மூலம் கவணத்தை ஈர்த்த ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இந்நிறுவனம் ஏற்கனவே தனுஷின் தொடரி படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க