• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் இரண்டு படங்களை தயாரிக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

January 1, 2019 தண்டோரா குழு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக மாரி 2 படம் வெளியானது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்ததாக வெற்றி மாறன், ராம்குமார், துரை செந்தில் குமார் ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை சத்ய ஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ தனுஷ் தான்.

முதலில் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது அவர்களுக்கு 34-வது படமாகும். அதைபோல் அந்நிறுவனத்தின் 35-வது படத்தில் முண்டாசுபட்டி, ராட்சன் படங்கள் மூலம் கவணத்தை ஈர்த்த ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இந்நிறுவனம் ஏற்கனவே தனுஷின் தொடரி படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க