• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம் – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி !

October 26, 2018 தண்டோரா குழு

சர்கார் படக்கதையும்,செங்கோல் படக்கதையும் ஒன்றென தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் , முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சர்க்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் சர்கார் படத்துக்கு தடைவிதிக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அக்.30க்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட உதவி இயக்குநர் வருணின் செங்கோல் படக்கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படக்கதையும் ஒன்று தான். தெளிவாக விவாதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், சங்க உறுப்பினரான வருண் என்கிற கே.வி.ராஜேந்திரனின் செங்கோல் என்ற கதையும், சர்கார் படக்கதையும் ஒன்றே என முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், நியாயத்திற்காக, ராஜேந்திரன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு, தடை செய்ய மாட்டோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைபோல் ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க