• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு !

October 3, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்,

கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக நிதியை அள்ளி வழங்கி வருகிறார் கலாநிதிமாறன். ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி. ஒருவிரல் புரட்சி பாடல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எழுச்சி. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. பழ.கருப்பையாவுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக நினைக்கிறேன்.வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானால் உழைக்கலாம். வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, இயற்கை.எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறாம்.“சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்” எனக் கூறினார்.

அப்போது, நீங்கள் முதலமைச்சரானால் மாற்ற வேண்டிய முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழிக்க பாடுபடுவேன். மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கையில ஜம்முனு இருக்கலாம்.
இவ்வாறு விஜய் பேசினார்.

மேலும் படிக்க