• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை நம்பி ஒரு நடிகனாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி – தனுஷ் உருக்கமான கடிதம்

May 10, 2019 தண்டோரா குழு

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தற்போது, நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பளார், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

இன்று இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.17 வருடங்களுக்கு முன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமான நாள் இன்று. இதற்காக அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த முக்கிய நாளில் தனக்கு துணையாக நின்ற தன்னுடைய குடும்பத்தினர்,ரசிகர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில்,

2002ம் ஆண்டு மே மாதம் 10 தேதி தான் நான் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படம் வெளியானது. அந்த நாள் என் வாழ்கையை மாற்றிவிட்டது. உண்மையிலேயே இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னால் நம்ப முடியவில்லை? என்னை நம்பி ஒரு நடிகனாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தான் என்னை மெருகேற்றிக்கொள்ள உதவியது. முடிந்தவரை இந்த உலகத்தில் அன்பை பரப்புவோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க