• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்படியே இந்தப் படத்துக்கும் ஒரு வழிய சொல்லுங்க… கவுதம் மேனனிடம் கார்த்திக் நரேன் கேள்வி!

November 4, 2019 தண்டோரா குழு

தனுஷ் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படப்பிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆயும் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு திரைக்கு வராமல் இருந்து வந்தது. இதற்கிடையில் இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு 2020-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி துருவ நட்சத்திரம் படம் குறித்துப் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், அடுத்த 60 நாட்களில் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். ஒரே நாளில் இந்த அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில், கவுதம் மேனனின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர்.

இதற்கிடையே துருவங்கள் 16 படத்தின் முலம் புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவுதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து நரகாசூரன் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் சமூகவலைதளங்களில் கார்த்திக் நரேனும், கவுதம் மேனன் ஒருவரையொருவர் தாக்கி கருத்து பதிவிட்டனர்.

பின்னர் எனக்கும் கார்த்திக் நரேனுக்கும் எனக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விட்டன. படம் விரைவில் வெளிவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று கவுதம் மேனன். கடந்த வருடம் கூறினார்.இந்நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்ட இயக்குநர் கவுதம் மேனனிடம் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், நரகாசூரன் படம் எப்போது வெளிவரும் என்று சொன்னால் உதவியாக இருக்கும். இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமானது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க