• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மில்டனின்கோலி சோடா-2′ படப்பிடிப்பு தொடங்கியது

July 10, 2017 தண்டோரா குழு

விஜய்மில்டன் இயக்கத்தில் வெளிவந்த கோலி சோடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

விஜய் மில்டன் ‘கடுகு’ படத்தைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கியுள்ளார். அதன் படி ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கோலி சோடா 2’ படத்தையும் விஜய் மில்டனே தயாரிக்கவுள்ளார்.

மேலும், விஜய் மில்டனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க