• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்வராகவன் படம் மூலம் என் வாழ்கையில் நிறையமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

May 3, 2017 தண்டோரா குழு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்வி பதில் அளித்துக் கொண்டிருந்தார் நடிகை நந்திதா. அப்போது, செல்வராகவன் படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதா? என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக செல்வராகவன் படத்தில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். இதற்காக நான் சண்டை பயிற்சியையும் கற்றுக்கொண்டேன். இது என் வாழ்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம், வருகிற மே மாதம் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க