• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் வாழ்

June 27, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தனதுதயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதன் முதலாக கனா படம் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது.கனாபடத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் தயாரித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தான் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க