• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடந்த ஆண்டு 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

March 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 146 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 99 திருமணங்கள் தகவல் கிடைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 12 குழந்தை திருமணமும், பிப்ரவரி மாதத்தில் 11 திருமணமும் என கடந்த 2 மாதங்களில் மட்டும் 23 திருமணங்கள் நடந்துள்ளன.இதில் 15 திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 8 திருமணங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க