• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து

December 22, 2016 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்திற்குப் புதிதாக 11 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்தும், நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பிலும் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, பாமகவின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க