• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வாணைய உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து

December 22, 2016 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்திற்குப் புதிதாக 11 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்தும், நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பிலும் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, பாமகவின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க