• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடியவர்கள் கைது

February 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் காணாமல் போன வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் காட்வின் (19), அஸ்வின் (19), சுரேஷ் (33), பிரபாகரன் (24) மற்றும் விக்கி என்கிற விக்னேஷ் (23) ஆகியோர்கள் சேர்ந்து Grindr App என்கிற டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவரின் புகைப்படம் , இருப்பிடம் மற்றும் அவர்களின் முழு விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விபரங்களை பயன்படுத்தி அவர்களிடம் நட்பாக இணையதள வாயிலாக பேசி, ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை நேரில் வரவழைத்து இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்து மிரட்டி பின்பு அவர்களிடமிருக்கும் விலைமதிப்புமிக்க போன், இருசக்கர வாகனம், நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளார்கள் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 மொபைல் போன், இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பறித்துச் சென்ற ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் கூறுகையில்,

‘‘இது போன்ற செயலியை பயன்படுத்தி நூதன முறையில் வழிப்பறி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க