• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

December 20, 2016 தண்டோரா குழு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமணையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை பெற்று வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். அவருக்கு டயாலிசஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் டிசம்பர் 10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த வாரம் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, எதிர்பார்த்தபடி திங்கட்கிழமை (டிசம்பர் 19) அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக எய்ம்ஸ் மருத்துவமனை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க