• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் நிதியுதவி கோரி விண்ணப்பிக்க கெடு நீடிப்பு

December 20, 2016 தண்டோரா குழு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு, தமிழக அரசின் ரூ. 2௦௦௦௦ நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறந்த இடமான ஜெருசலேம் நகருக்கு புனிதப் பயணம் செல்வது வழக்கம். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல தமிழக அரசாங்கத்தால் நபர் ஒருவருக்கு ரூ 2௦,௦௦௦ நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பட வேண்டும்.

இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 16.12.2016 அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு 30.12.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” கோவை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து கிறிஸ்தவர்களும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, 2016-17 ம் ஆண்டிற்கான ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ளுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க