• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் – வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்

December 19, 2016 தண்டோரா குழு

வர்தா புயலால் 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை வர்தா புயலாக மாறி சென்னையை டிசம்பர் 12ம் தேதி தாக்கியது. அதிகபட்சமாக சென்னையில் 38செ. மீ மழை பெய்தது. மணிக்கு 19௦ கிலோ மீட்டர் வேகம் வரை புயல் காற்று வீசியது.

தமிழகம் முழுவதும் வர்தா புயலால் கன மழை பெய்தது. சென்னையில் பல ஆயிரம் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் வர்தா புயலால் மூன்று மாவட்டங்களில், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை எழிலகத்தில் திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

வர்தா புயல் வீசிய போது, மூன்று மாவட்டங்களில், 24 பேர் உயிர் இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில், 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

புயலினால், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 5,500 ஹெக்டேர் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 529 மாடுகள், 299 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. 70 ஆயிரம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க