• Download mobile app
07 Jan 2026, WednesdayEdition - 3619
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டப்பட்டது

December 19, 2016 தண்டோரா குழு

ஆட்டோ ஓட்டுனரின் பெண் குழந்தைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் பெயரை சசிகலா நடராஜன் சுட்டினார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார். இவருக்கு காயத்திரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகிய சசிகலா நடராஜன் தான் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட சசிகலா நடராஜன் அந்த பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என சென்னை போயஸ் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 18) பெயர் சூட்டினர். ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதன் பிறகு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும், சசிகலாவும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டப்பட்டதால் கட்சி தொண்டர்களும், குழந்தையின் பெற்றோரும் மகிழ்சியடைந்தனர்.

மேலும் படிக்க