• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதியை சந்தித்து ராகுல்காந்தி உடல் நலம் விசாரிப்பு

December 17, 2016 தண்டோரா குழு

இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் மு.கருணாநிதியை மருத்துவமணையில் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து சனிக்கிழமை(டிசம்பர் 17) விசாரித்தார்.

திமுக கட்சி தலைவர் மு.கருணாநிதி(93), வியாழக்கிழமை சுவாச கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வெள்ளிக்கிழமை(டிசம்பர் 16) குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கும் ‘டிரக்யாஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள், உறவினர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனிடையே, ராகுல் காந்தியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறுகையில்,”கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்” என்றார்.

இந்நிலையில் டிசம்பர் 2௦ம் தேதி நடக்கவிருந்த திமுக பொதுகுழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அக்கூட்டத்தின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க