• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

5-வது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி477 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

December 17, 2016 தண்டோரா குழு

இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 146 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய அணியின் பார்த்திவ் பட்டேல், கே.எல். ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

மேலும் படிக்க