• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவேடுக்கப்படும் – துரைமுருகன்

December 16, 2016 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு திமுக பொதுக் குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 7 ம்தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரேனே நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வியாழன்று சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையெடுத்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒளிவு மறைவின்றி அவரது உடல்நலம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

மேலும், திமுக பொதுக்குழு வரும் 20 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து கேட்டதற்கு, பொதுக்குழுவை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் படிக்க