• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

16 வயது சிறுமி கர்ப்பம்; லாரி டிரைவர் போக்சோவில் கைது

December 11, 2021 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). லாரி டிரைவர். இவருக்கும் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. அந்த சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மகேந்திரன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காந்திபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.
அப்போது 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது தொடர்பாக டாக்டர்கள் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 16 வயது சிறுமியை திருமணம் செய்த மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் படிக்க