• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா ஜெயலலிதாவின் வாரிசு தான் – பொன்னையன்

December 16, 2016 தண்டோரா குழு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்றும் இதனை அவரே தெரிவித்துள்தாவும் ஆதாரங்களுடன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்தார்.

சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது வாரிசாக சசிகலாவைத் தான் கூறியுள்ளார்.இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.மேலும், 1997ம் ஆண்டு ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ.7 லட்சத்தை முதலீடு செய்தார். அப்போது நிதி சேமிப்பு வாரிசாக சசிகலா பெயரைத் தான் ஜெயலலிதா எழுதி கையெழுத்திட்டுள்ளார் என்றும்அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார் பொன்னையன்.

மேலும் படிக்க