• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனைபெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவு

December 16, 2016 தண்டோரா குழு

சூரிய மின்தகடு ஊழல்வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுசிறைத்தண்டனை வழங்கி பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக நடிகை சரிதா நாயர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிஜு ராதாகிருஷ்ணன்மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டபட்டு இருந்தது.

இதையெடுத்து கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பெரும்பாவூர் நீதிமன்றம்,நடிகை சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்து இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க