• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனைபெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவு

December 16, 2016 தண்டோரா குழு

சூரிய மின்தகடு ஊழல்வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுசிறைத்தண்டனை வழங்கி பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக நடிகை சரிதா நாயர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிஜு ராதாகிருஷ்ணன்மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டபட்டு இருந்தது.

இதையெடுத்து கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பெரும்பாவூர் நீதிமன்றம்,நடிகை சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்து இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க