• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.டி., துறை அதிகாரிகளுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு

December 16, 2016 timesofindia

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த மாதம் பதவி ஏற்கும் டொனல்ட் டிரம்ப், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. துறை அதிகாரிகளை புதன்கிழமை(டிசம்பர் 14) சந்தித்து பேசினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹட்டன் பகுதியில் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவரில் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளை சந்திக்க புதன்கிழமை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்டெல், அமேசான், பேஸ்புக், ஆப்பிள், கூகுள், ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், ஓரகில், சிஸ்கோ, டெஸ்லா ஆகிய நிறுவங்கள் இந்த கூடத்தில் பங்கேற்றனர். இந்த நிறுவங்களுடன், இந்திய வம்சவாளியான மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ள இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அக்கூடத்தில் டொனல்ட் டிரம்ப் பேசியதாவது:

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஐ.டி. நிறுவங்கள் முன்வர வேண்டும். அமெரிக்க ஐ.டி. நிறுவங்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக உள்ளேன். மற்ற நாடுகள், நமது நாட்டின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காத அளவிற்கு நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சர்வதேச சூழலுக்கு ஏற்ற வகையில் வரி குறைப்பு செய்யும் கோரிக்கை வந்துள்ளது. அது குறித்து பரிசீலிப்போம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னுடைய அலுவலக அதிகாரிகளையோ அல்லது என்னையா நீங்கள் தைரியமாக தொடர்பு கொள்ளலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க