• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் வீடு திரும்புவார் சுஷ்மா சுவராஜ் – எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

December 14, 2016 தண்டோரா குழு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டுள்ளார். இவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக நவம்பர் 7-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வந்தது. நிரந்தர நிவரானம் பெற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

டிசம்பர் 10-ம் தேதி சுஷ்மா சுவராஜிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தானமாக அளிக்க முன்வந்த சிறுநீரகங்கள் பொருந்தாத நிலையில் உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது;

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல்நிலை சீரடைந்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, விரைவில் அவர் வீடு திரும்புவார்.
இவ்வாறு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க