• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மினியேச்சர் பொருட்கள் செய்து அசத்தி வரும் கோவையை சேர்ந்த சகோதரர்கள்

October 27, 2021 தண்டோரா குழு

கோவை செல்வபுரத்தை சேர்ந்த பைசல் பசீனா தம்பதியினரின் மூத்த மகன் முகமது மிப்ஜல்(14), இளைய மகன் முகமது பாசில்(12). தனியார் பள்ளியில் பயின்று வரும் இவர்கள் இருவரும் கொரோனா காலத்தில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி பேருந்து, பைக், லாரி போன்ற மினியேச்சர் வாகனங்களை வடிவமைத்துள்ளனர்.

இதனை கண்ட சிறுவர்களின் பெற்றோர்களும் சிறுவர்கள் இவற்றை செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். கடந்த ஊரடங்கு காலத்தில் பொழுது போக்கிற்காக எதையாவது இது போன்று விளையாட்டு பொருட்கள் செய்ய ஆரம்பித்த இவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட மினியேச்சர் பொம்மைகளை வடிவமைத்து அதில் மினி எல்.இ.டி விளக்குகள் போன்றவற்றை பொருத்தி அசத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு படி மேலாக சென்று சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல் ஒன்றை துவக்கியும் அதிலும் இவர்கள் செய்வதை அப்லோட் செய்து வருகின்றனர்.இவற்றை வடிவமைக்க எங்களுடைய தாத்தா தான் முதல் உந்து கோளாக இருந்தார் என்றும் பள்ளிகள் துவங்கினாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை தொடர்ந்து செய்து வருவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். சகோதரர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டுதலை பெற்று வருகிறது.

மேலும் படிக்க