• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோ மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்

December 7, 2016 தண்டோரா குழு

மறைந்த மூத்த பத்திரிகையாளர் “சோ” எஸ். ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி “டுவிட்டரில்” இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடக, திரைப்பட நடிகரும், “துக்ளக்” பத்திரிகை ஆசிரியருமான “சோ” உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் புதனன்று (டிசம்பர் 7) அதிகாலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சோ சிறந்த தேசியவாதி. அச்சமின்றி பேசக்கூடியவர். பன்முகத் தன்மை கொண்டவர். வெளிப்படை தன்மையுடன் பேசக் கூடியவர். சிறந்த அறிவாளி. எல்லாவற்றிற்கும் மேல் அவர் எனது நெருங்கிய நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சோவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க