• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை

November 28, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது;

வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர்க் காற்று வீசுகிறது. நவம்பர் 30ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.

தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவத்தில் இதுவரை 10 சதவீதம் அளவுக்குத்தான் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதனால், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நவம்பர் 30 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்.

மேலும் படிக்க