• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.8.11 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது – இந்திய ரிசர்வ் வங்கி

November 29, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் நவம்பர் 27ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 ம் தேதி இரவு அறிவித்தார். பழைய நோட்டுகளை டிசம்பர் இறுதிக்குள் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் குவிந்தனர். தனிநபர் வங்கி கணக்கு உள்ளவர்கள் ரூபாய் 2.5 லட்சம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும்.

அதற்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டும். இதையடுத்து, வங்கி கணக்கு வைத்துள்ளோர் தங்களது கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருகின்றனர். வங்கி கணக்கு இல்லாதோர் அரசு வழங்கி உள்ள அடையாள அட்டையைக் காண்பித்து பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்.

இது குறித்து சென்னை இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “நாடு முழுவதும் நவம்பர் 10 ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை மொத்தம் ரூ.8.11 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.16 லட்சம் கோடி வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ரூ.33,948 கோடி மதிப்பில் புதிய நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க