• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல் உறுப்பு தானம் செய்ய எளிய நடைமுறை – மத்திய அமைச்சர்

November 28, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தை எளிமைப்படுத்தும் வகையில் உரிய விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்றும் பணிகளில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

புது தில்லியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டின் தேவைக்கேற்ப தற்போது உறுப்புகள் தானம் செய்யப்படுவதில்லை. உடல் உறுப்புகள் தேசத்தின் வளம். அதை வீணாக்கக் கூடாது. உறுப்புகளை தானம் செய்வது என்பது பிறருக்கு அளிக்கும் அன்பளிப்பாகும்.

பொதுநல, சமத்துவ மற்றும் தார்மீக கடமையாகும். உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் முடிந்த வாழ்க்கையை, வேறொருவர் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடியும். எனவே உடல் உறுப்பு தானம் தேசிய இயக்க மாக மாற வேண்டும்.

மரணமடையும் நேரத்திலும் சக குடிமகனின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதையும் மனிதத்தைப் பெரிய அளவில் நாம் போற்றுவதையும் உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும். உறுப்பு தானத்தை எளிமைப்படுத்துவதற்கான விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்றும் பணிகளில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

ஆண்டுதோறும் நமது நாட்டில் 1.5 லட்சம் பேர் மூளைச் சாவு அடைகின்றனர். அத்தனை பேரிடம் இருந்தும் உறுப்புகளை தானமாகப் பெறுவதன் மூலம் சில லட்சம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.

உறுப்பு தான பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தையும் சுகாதார அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் டுவிட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில் மத்திய அமைச்சர் நட்டா, “உறுப்பு தானம் செய்வதற்கு கடந்த ஜூன் வரையில் 10 ஆயிரம் பேர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இப்போது ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். அடுத்த ஆண்டு இது 20 லட்சமாக உயரும் என விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க