• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பினாமி சொத்துகளையும் ஒழித்தால் தான் கறுப்புப் பணம் ஒழியும் – நிதீஷ்குமார்

November 26, 2016 தண்டோரா குழு

பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கறுப்புப் பண ஒழிப்பு தீர்வை எட்ட முடியும் என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பழைய ரூபாய் 500,100 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது தொடர்பாக பல்வேறு தரப்பினர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிவிட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் துணிச்சலான நடவடிக்கை என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேசியதாவது:

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கை. இருப்பினும் அதை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கறுப்புப் பண ஒழிப்பு தொடர்பாக சிறந்த தீர்வை எட்ட முடியும். மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதால், பிகாரில் உள்ள மகா கூட்டணியில் பிளவு ஏற்படாது.

இவ்வாறு நிதீஷ்குமார் கூறினார்.

மேலும் படிக்க