• Download mobile app
23 Jan 2026, FridayEdition - 3635
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கி விடுமுறையால் ஏ.டி.எம். மையங்கள் முடங்கும் சூழல்

November 26, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏ.டி.எம். மையங்கள் முடங்கும் சூழல்நிலை உருவாகியுள்ளது.

நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்பிலான ரூபாய் 500, 1000 செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பணத்தட்டுப்பாட்டைப் போக்க அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்கி வந்தன.

அப்படி இருந்தும் பொதுமக்களுக்குப் பணம் வழங்க முடியாமல் வங்கிகள் தவித்து வருகின்றன. பல ஏ.டி.எம். மையங்கள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வார நாட்களில் வேலைக்குச் செல்வோர் விடுமுறை நாளில் பணம் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் நம்மிடத்தில் கூறியதாவது;

வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சனிக்கிழமை, மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும். எனவே, நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 26 வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நாள் ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையாகும்.

எனவே, வங்கியின் செயல்பாடுகளைப் பயன்படுத்துவோர் திங்கள்கிழமை வரையில் காத்திருக்க வேண்டும்.

வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியவை இரண்டு நாட்கள் செயல்படாது என்பதால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம். மையங்களில் ஏராளமானோர் ஏடிஎம் மையங்களில் கூடுவர். இதன் காரணமாக ஏ.டி.எம் மையங்கள் முடங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் படிக்க