• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

November 17, 2016 தண்டோரா குழு

வங்கக் கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி குமரிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. எனினும், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தால் தமிழகம் புதுவையில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்தால், அதன் தீவிரத்தைப் பொருத்து மழை அதிகரிக்கக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை ஒரு சில நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,

புதன்கிழமை காலை நிலவரப்படி சென்னை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் அதிகபட்சமாக, 20 மி.மீ. மழையும், சேரன்மகாதேவி, தூத்துக்குடி, சீர்காழி ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

மேலும் படிக்க