• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளத்திலிருந்து முட்டை, கோழிகள் கொண்டுவர தமிழக அரசு தடை

November 5, 2016 தண்டோரா குழு

பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவாமல் தடுப்பதற்காக கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு முட்டை மற்றும் கோழிகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. நோயைத் தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்திற்குப் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் பறவைக் காய்ச்சல் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் புளியரையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, புளியரையில் உள்ள முகாமைத் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் சக்திவேல் ஆய்வு செய்தார். அந்த வழியாக வந்த சில கேரள வாகனங்களில் அவரும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பாகங்களிலும் பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக – கேரள எல்லையில் 16 இடங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தக் காரணத்திற்காகவும் அவற்றைத் தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று முகாமில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார் கூடுதல் இயக்குநர் சக்திவேல்.

மேலும் படிக்க