• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பருவமழை தொடக்கம் – வானிலை இயக்குநர்

October 31, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம், புதுவையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகம், கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் சில இடங்களில் 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உடுமலை, வாடிப்பட்டியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க