June 30, 2020
தண்டோரா குழு
கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் தொண்டர்களை ஒன்று திரட்டி சந்திப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ராசாமணி அறிக்கையில் கூறியிருப்பது,
அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்களையும் பொதுமக்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.இதனால் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இச்சூழல் கோவையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலிலும் ஊரடங்கு முழுமையாக அகற்றப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் பிற அமைப்புகள் இயக்கப் பிரதிநிதிகள் தொண்டர்களை சந்திப்பது பொதுமக்களை திரட்டி ஓரிடத்தில் கூட்டுவது தவிர்த்துவிட வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.