• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பட்டாசு வெடிவிபத்தில் ஒருவர் பலி

October 21, 2016 தண்டோரா குழு

கோவை காந்தி பூங்கா அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காந்தி பூங்கா அருகே அமைந்துள்ளது கேபிஆர் ஐஏஎஸ் அகடாமி உள்ளது. அதன் அருகில், ஒரு பட்டாசுக் கிடங்கில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கிடங்கிற்கு அருகில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.பட்டாசுக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக உருவான புகை அருகிலுள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய கட்டடத்திற்கும் பரவியது.

இதனால் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் புகை மூட்டம் காரணமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களையும் அவர்கள் மீட்டனர்.

கோவையில் பட்டாசு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகாசி பட்டாசு கிடங்கில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது கோவையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க