May 11, 2020
தண்டோரா குழு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் குணமடைந்ததால்
திருப்பூர் தொற்று இல்லாத மாவட்டமாகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7000ஐ தாண்டியது.இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 114 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்ப உள்ளனர். இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.கொரோனா இருந்த எஞ்சிய இருவரும் குணமடைந்ததால் திருப்பூர்
தொற்று இல்லாத மாவட்டமாகிறது.